சூடான செய்திகள் 1

ஜாகிர் நாயக் தொடர்பில் மலேசிய அரசின் நிலைப்பாடு என்ன?

(UTVNEWS|COLOMBO) – இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறை ஜாகிர் நாயக்கை இன்று வரை சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கவில்லை என்று கடந்த ஜூலை மாதமே சுட்டிக்காட்டி உள்ளார் மலேசிய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்களின்படி ஜாகிர் நாயக் இன்னும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் பட்டியலிலும் சேர்க்கப்படவில்லை.

ஜாகிர் நாயக்கிற்கு எந்தவித சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்றும், அவர் மலேசியாவிற்கு சட்டப்பூர்வமாகவே வந்தார் என்றும், சட்டபூர்வமாகவே மலேசியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வந்தார் என்றும் மொகிதின் யாசின் தெளிவுபடுத்தியுள்ளர்.

Related posts

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

லோட்டஸ் டவரிலிருந்து தமிழ் இளைஞன் எவ்வாறு விழுந்தார்..உண்மைக் காரணம் வௌியானது..!

மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து