உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகவே அவர் சென்றுள்ளார்.

இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், அதில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

துப்பாக்கிச் சூட்டு பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார்!

புதிதாக 261 கொரோனா நோயாளிகள் [UPDATE]

பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க திட்டம்!