அரசியல்

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம்

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் காணப்படும் குறைகளை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேல்’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் என்ற சொற்றொடரை இணைக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்திருந்தார்.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பிரதமர் ஹரிணி வாக்குறுதி

editor

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் – 18 உறுப்பினர்களின் பெயர்கள்

editor

உள்ளுர் வளங்களை விற்காத ஒருவரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் – நாமல்