உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு பரிசீலனைக்கு திகதி குறிப்பு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படும் என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை (15) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவடுனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால், அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு அனுப்பி, அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் வரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படுவதாக தீர்ப்பளிக்க வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிக்க இடமளிக்கப்பட மாட்டாது

பிரதமர் திருப்பதி ஏழுமலையான் கோவில் வழிபாடுகளில்

ஒட்சிசன் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி