உள்நாடு

ஜனவரி 05 முதல் 05 மாதங்களுக்கு ரயில் சேவை இடம்பெறாது.

(UTV | கொழும்பு) –  ஜனவரி 05 முதல் 05 மாதங்களுக்கு ரயில் சேவை இடம்பெறாது.

சுத்த வருடம் ஜனவரி 05ஆம் திகதி முதல் 05 மாதங்களுக்கு அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் புகையிரத சேவைகள் இடம்பெறாது என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

கொழும்பு, கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கு மாத்திரமே ரயில் சேவைகள் இடம்பெறும்எனவும், அனுராதபுரத்தில் இருந்து வவுனியா வரை பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பஸ்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, காங்கேசன்துறை-முறுக்கண்டி இடையே பயணிக்கும் யாழ்ராணி புகையிரதம் வவுனியா வரை இந்த 05 மாத காலப்பகுதியில் சேவையில் ஈடுபடும்எனவும் தெரிவித்வத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் ஜனாதிபதி குழு

மசகு எண்ணெய் விலையில் மீண்டும் உயர்வு

தலவாக்கலையில் 4 சிறுவர்களை காணவில்லை