உள்நாடு

சுகாதார சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும்

(UTV | கொழும்பு) – சில கோரிக்கைகளை முன்னிறுத்தி தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.

தங்களது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த துணை வைத்திய சேவை ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் பருவகால சீட்டு முறை இரத்து – போக்குவரத்து அமைச்சு.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ? நிதியமைச்சகம் அனுமதி வழங்கவில்லை – அமைச்சர் விஜித ஹேரத்

editor

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் விஷேட பிரிவு [VIDEO]