உள்நாடு

சீன பாதுகாப்பு அமைச்சர் நாட்டிலிருந்து விடைபெற்றார்

(UTV | கொழும்பு) – இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங், சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் (27) நாட்டை வந்தடைந்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரை நேற்று (28) சந்தித்து பேசினார்.

இந்நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் இன்று காலை 8.55 மணியளவில் சீனா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

அவருடன் 37 பேர் இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அனைவரும் சீன விமான படைக்கு சொந்தமான பீ-4026 என்ற விசேட விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related posts

மின்சார சபை நட்டத்தில் – சுனில் ஹந்துன்நெத்தி

நடுநிலை பேணும் மனநிலையில் செயற்பட்ட முன்னாள் சபாநாயகருக்கு ரிஷாட் அனுதாபம்

சுகாதார அமைச்சின் அறிவிப்பு