உள்நாடு

சிறைக்கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்று நிலைமை காரணமாக சிறைகைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள், காணொளி தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கைதிகளை சிறைச்சாலைகளுக்கு இடமாற்றும் செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை – இத்தாலி இருதரப்பு விமான சேவைகள்

editor

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி கோரிக்கை

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் ஜனாதிபதியினை சந்தித்தனர்