சூடான செய்திகள் 1

சட்டவிரோத போதை பொருட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) மினுவங்கொடை – எசெல்ல பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து கஞ்சா கலவை செய்யப்பட்ட 4438 மதனமோதகம் போதை குளிசைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

இன்று(14) நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் கைவிடப்பட்டது

கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று

ரணில் – சஜித் இடையில் நாளை முக்கிய சந்திப்பு