முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அந்த ஆட்சிகளுடன் தொடர்புடைய தனிநபர்களின் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி கூறுகிறார்.
இதன் மூலம் நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட சொத்தை சட்டபூர்வமாகவும் முறையாகவும் அரசாங்கம் கையகப்படுத்த முடியும் என்று அவர்கூறினார்.
இந்த நோக்கத்துக்கான சட்டமூலத்தை ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.