அரசியல்உள்நாடு

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட புத்தளம் மாவட்ட முன்னாள் எம்.பியின் சொகுசு வாகனம் மீட்பு

புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர பயன்படுத்தியதாகக் கூறப்படும், சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ வாகனம், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இன்று (06) காலை பகுதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தற்போது குறித்த பகுதியை விட்டு வெளியேறிவிட்டார், இதன் காரணமாக விசாரணை அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட வாகனம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெற முடியவில்லை.

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட லேண்ட் குரூசர் வகை பிராடோ காரைப் பயன்படுத்தியதாக முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்தது.

அதன்படி, பல நாட்களாக தொடர்புடைய தகவல்களை ஆராய்ந்த பின்னர், வாகனத்தை தங்களது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு விசாரணை அதிகாரிகள் குழு இன்று காலை புத்தளம் சென்றது.

அங்கு தொடர்புடைய வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் சோதனை செய்ததில், வாகன பாகங்கள் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான புத்தளத்தில் உள்ள ஒரு தென்னந்தோட்டத்திலும், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

அதன்படி, வாகனத்தின் உடல் பாகங்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன, மேலும் இயந்திரம் உட்பட பல பாகங்கள் அவரது தென்னந்தோப்பில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டன.

முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணையில், சம்பந்தப்பட்ட வாகனம் ஏற்கனவே விவசாயத் திணைக்களத்தின் ஊடாக தற்போது பயன்படுத்தப்படும் பிராடோ வாகனத்தின் இயந்திர எண் மற்றும் Chassis எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய வாகனத்தில் தொடர்புடைய எண்கள் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துவரும் நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் வாகனத்தை பிரித்து மறைத்து வைத்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் நேற்று (05) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்த போதிலும், அவர் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஜகத் சமந்தவுக்கு பிணை

வேலுகுமார் எம்.பி ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor

கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் இடம்பிடித்த இலங்கை இளைஞர்!