உள்நாடு

சட்டங்களை மீறும் பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை

(UTV | கொழும்பு) – தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தராதரம் பார்க்கமால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகளை அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளதுடன் அதற்கு எதிராக செயற்படுபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவிலிருந்து இலங்கை வந்த 163 மாணவர்கள்

அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமான அரிசி கையிருப்பில் -மஹிந்த அமரவீர தெரிவிப்பு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் வழமைக்கு