கிசு கிசுசூடான செய்திகள் 1

சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?; ரணில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை

(UTVNEWS|COLOMBO) – மக்கள் கேட்கின்ற ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுத்தால் அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக முடிவாகவே அமையும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சேபனை எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு கட்சிக்குள் இருக்கும் ஒருசிலர் விரும்பவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சபாநாயகர் திலங்க சுமதிபால பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் Ph.D திட்டம் தொடங்க இருதரப்பு ஒப்பந்தம்

தபால் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில்

காலி நகரின் நீர் விநியோகம் தடை