அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (03) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அவர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இங்கு எதிர்க்கட்சித் தலைவரை தெளிவூட்டினர்.
கிட்டிய காலத்தில் அவர்கள் எதிர்நோக்கி வரும் விடயங்களை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அவர்களுக்கு உறுதியளித்தார்.