விளையாட்டு

சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை

(UTV | கொழும்பு) –  பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 98ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.56 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.

இதன் மூலம் 2018ஆம் ஆண்டு சுகததாச விளையாட்ரங்கில் யாழ். வீராங்கனை அனித்தா ஜெகதீஸ்வரன் நிலைநாட்டிய 3.55 மீற்றர் என்ற தேசிய சாதனையை சச்சினி முறியடித்தார்.

Related posts

புதிய ஆடம்பரக் காரை வாங்கிய விராட் கோலி [VIDEO]

தன்னம்பிக்கையினை இழந்தாரா மேத்யூஸ்

சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடர் – நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் பங்களாதேஷ்