உள்நாடு

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்கள் கைது

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்திற்கு இணங்க, போதைப்பொருட்களைத் தடுக்கும் நோக்கில், களுத்துறையில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பொலிஸ் சிறப்புப் படை மற்றும் இராணுவம் இணைந்து ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 21 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ பொலிஸ் நாய் சஞ்சுவும் இந்த சிறப்பு நடவடிக்கையில் பங்கேற்றது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் சுத்தம் செய்யும் திட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில், ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், வாதுவ கடற்கரை பாணந்துறை பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்களால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024 || UTV Short Film Competition 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

பாராளுமன்ற பணிப்பெண்கள் பாலியல் விவகாரம் குறித்த விசாரணை ஆரம்பம்.