பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் ரொட்டி மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதி ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.