உள்நாடு

#கோட்டாகோகம தாக்குதல் : முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மொரட்டுவை மாநகர சபை ஊழியரும் கைது

(UTV | கொழும்பு) – #கோட்டாகோகம மற்றும் #மைனாகோகம மீதான தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவ மாநகர சபை ஊழியர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, மே 9ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 159 பேர் நேற்று (மே15) கைது செய்யப்பட்டிருந்த நிலையில், முன்னதாக 398 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related posts

2023 வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்

நாடாளுமன்ற உறுப்பினராக பசில் பதவியேற்றார்

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு