உள்நாடு

பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது

(UTV|கொழும்பு)- பகிடிவதை சம்பவம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைபாட்டிற்கு அமைய, பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரிக்கா விஜேரத்ன தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் உணவகத்திற்குள் பகிடிவதை சம்பவம் குறித்து ​மோதல் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பம்!

நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது

அரசாங்கத்திற்கு எதிராக மகிந்த விடுத்துள்ள அறிக்கை…