உள்நாடுபிராந்தியம்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது – 21 பேர் காயம்

நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி விபத்துள்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தலம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நுரைச்சோலையில் பழுதடைந்த ஜெனரேட்டர் திங்கள் முதல் வழமைக்கு

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)

தேசிய மக்கள் சக்தியின் MPக்களின் பட்டங்களை ஆராய குழு நியமிக்க பிரேரணை – ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

editor