சூடான செய்திகள் 1

கொழும்பு நகரில் புதிய நீர் விநியோகத்திட்டம்

(UTV|COLOMBO)-களனி கங்கையின் தெற்கு பிரதேசத்திற்கு நீரை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்கீழ் கம்பஹா மாவட்ட மக்களுக்கு தேவையான நீர் வியோகம் இடம்பெறும் என அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான முகாமையாளர் பியல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகருக்கு புதிய நீர் விநியோகத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என்றும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களனி கங்கையின் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மணல் வேலியும் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கென 24 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

சம்பள அதிகரிப்பு நெருக்கடி: ஆளுநர் பதவியிலிருந்து  தான் விலகப் போவதில்லை

பிரபல பாடகி காலமானார்