(UTV | கொழும்பு) – கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6.30 இலிருந்து இந்து காலை 10 மணி வரையான கலப்பகுதியில் இடம்பெற்ற பயணசீட்டு பரிசோதனையின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையை பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில் நிலைய ஊழியர்கள் இணைந்து மேற்கொண்டதாக ரயில் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 78 பேர் அபராதத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தியுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதத் தொகை 02 லட்சத்து 38,770 ரூபாயாகும்.
ஏனைய 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகை 39,840 ரூபாய் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.
அதன்படி, பயணச்சீட்டு இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடம் இருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 லட்சத்து 78,610 ரூபாய் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .