உள்நாடு

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

(UTV|கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை(31) மற்றும் எதிர்வரும் 2, 3ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இந்த தினங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கந்தக்காடு : இதுவரையில் மொத்தம் 252 பேருக்கு தொற்று

ஆயிரம் இழுபறி தொடர்கிறது

அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு – 13 நடைமுறையா?