உள்நாடு

கொழும்பில் உள்ள சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு

(UTV | கொழும்பு) –  கொழும்பு துறைமுக நகரில் சேவையாற்றும் சீன பிரஜைகள் 1000 பேருக்கும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் இன்றுடன் கொழும்பு நகரில் உள்ள அனைத்து சீன பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (06) இரண்டாவது நாளாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் நேற்று 1,083 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபையின் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி தினூகா குருகே தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

கொரோனாவிலிருந்து மேலும் 368 பேர் குணமடைவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது

editor