உள்நாடு

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர் வெட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று(07) பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை 8 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 09, கொழும்பு 14 மற்றும் நவகம்புர ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 15 பகுதியில் குறைந்த அளவிலேயே நீர் விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

கெசல்வத்த தினுக துபாயில் உயிரிழப்பு

கருணா அம்மானை கைது செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு