உள்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்த சுமார் 8 கோடிக்கு இயந்திரம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸினை உடனடியாக கண்டுபிடிக்க அதிகூடிய தொழில்நுட்ப திட்டங்கள் கொண்ட இயந்திரம் ஒன்று சுமார் 8 கோடி 20 இலட்சம் செலவழித்து சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்ய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நான்கு நாட்களில் விமானம் ஊடாக குறித்த இயந்திரம் நாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாகவும், அதற்கான பணத்தினை திறைசேரியில் இருந்து வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக உபவேந்தர் சுதந்த லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த இயந்திரம் மருத்துவ பீடத்தின் டெங்கு ஆராய்ச்சி மையத்தின் சோதனைக்கும் பயன்படுத்தப்படும் என்று துணைவேந்தர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

சேனா படைப்புழுவினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு

PB இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது