சூடான செய்திகள் 1

கொச்சிக்கடை,கட்டான பிரதேசங்களை சேர்ந்த மூன்று கொள்ளையர்கள் கைது

(UTV|COLOMBO)-கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி வீடொன்றினுள் நுழைந்து அதன் உரிமையாளரை தாக்கி பணம் கொள்ளையிட்ட மூன்று பேரை காவற்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இவர்கள் கொள்ளையிட்ட ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவில் ஒரு தொகையினையும் , கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட உந்துருளியொன்றும் இதன் போது காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொச்சிக்கடை மற்றும் கட்டான பிரதேசங்களை சேர்ந்த 32 , 36 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

 

 

 

Related posts

தேர்தல்களை இலக்காகக் கொண்டே தன் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் – அமைச்சர் ரிஷாத்

எதிர்வரும் சில நாட்களுக்கு கொழும்பு வீதிகளுக்கு பூட்டு

வானிலை முன்னறிவிப்பு