வகைப்படுத்தப்படாத

கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 7 பேர் பலி

(UTV|AMERICA)-மெக்சிகோவின் குவிண்டினா ரோ மாகாணத்தில் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பிளயா டெல் கார்மன். இங்கு உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானவர்கள் குழுமி இருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

 

 

 

 

 

Related posts

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125வது பிறந்ததின நிகழ்வு

கெட்டபுலா ஆட்டோ பார்க் தமிழ் இளைஞர்களுக்குத் தொல்லைக்கொடுக்கும் அரசியல் பிரமுகருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவும் : சோ.ஸ்ரீதரன்

இலங்கை அகதிகள் கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளனர்