கிசு கிசு

கொழும்பு, ஆனந்த கல்லூரியில் கொரோனா வாசம் : இரு வகுப்புகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு, ஆனந்த கல்லூரியின் தரம் 7, 8 ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் ஆனந்த கல்லூரியின் சுமார் 70 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் முதல் நிலை தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டு மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ஜி.எஸ்.விதானகே நியமனம்

தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் கொத்தணி உருவாகும் சாத்தியமா

மே 9ம் திகதி நடந்தது இதுதான் – அநுரவின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரமேஷ்