உலகம்

குவைத்தில் நாளை முதல் ஊரடங்கு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சறுத்தல் காரணமாக குவைத் நாட்டில் 20 நாள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளை(10) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

குவைத் நாட்டில் இதுவரை 7,623 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வைரஸ் தொற்றுக்கு 49 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரே நாளில் 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமூக பரவலாக மாறுவதற்கு முன் நாடு முழுவதும் நாளை முதல் மே. 30 வரை 20 நாள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பலஸ்தீனர்களை வெளியேற்றி காசாவை அமெரிக்கா கைப்பற்றும்

editor

பெப். 6 வரை இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே புதியதொரு வர்த்தக ஒப்பந்தம்