உள்நாடு

குருநாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் 05 பேர் பலி

(UTV|குருநாகல்) – குருநாகல், அலவ்வ வீதியில் வலகும்புர பகுதியில் இன்று(22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.ர்.

டிப்பர் ரக வாகனம் ஒன்றும் சிறிய ரக கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமை காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வரக்காபொல பகுதியில் இடம்பெற்ற மரண வீடு ஒன்று சென்று விட்டு, காரில் வீடு திரும்பும் வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காரில் பயணித்தவர்கனே உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பேரீத்தம்பழ இறக்குமதிக்கு வரி விலக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

editor

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்