உள்நாடு

கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பில் தீர்மானம் மேட்கொள்ள முடியாது- செந்தில் தொண்டமான்.

(UTV | கொழும்பு) –

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்து வரும் அறவழிப் போராட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த காணிகளானது மகாவலி அதிகார சபைக்கு உட்பட்டது என்பதனால் தன்னால் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் பூட்டு

தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

editor

தேசிய வர்த்தக கோப்பகத்தின் முதல் அச்சுப் பிரதி பிரதமரிடம் கையளிப்பு

editor