(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி நகரில் அமைந்திருந்த நீர்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நகரில் யுத்த அழிவின் சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த நீர்தாங்கியை அகற்றுவதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் இருந்து நீர்தாங்கி ஒன்று 2000ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வீழ்த்தப்பட்டிருந்ததுடன், புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர்தாங்கியும் இறுதி யுத்த்தின்போது வீழ்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த நீர்தாங்கியை யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யுத்த ஞாபக சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது குறித்த நீர்தாங்கிகள் அகற்றப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்தது.
எஸ்.என்.நிபோஜன்
![](https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif)