சூடான செய்திகள் 1

கிங்சி வீதி-கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரை ஒருவழிப் போக்குவரத்து?

(UTV|COLOMBO) கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் வாரநாட்களில் ஹோட்டர்ன் பிரதேசம், கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.

ஆயுர்வேத சுற்றுவட்டத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கிங்ஸி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரை பயணிக்கும் வாகனங்கள் மருதானை, பொரளை வீதிகளின் இரு மருங்கிலும் அல்லது கிங்சி பகுதியினூடாக வோர்ட் பிளேஸின் இரு மருங்கிலும் பயணிக்க முடியும் என பொலிஸார் வாகன சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

Related posts

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிரான மனு ஜனவரியில் விசாரணைக்கு

பயங்கரவாதம் என்ற விடயத்தில் அதிகம் அடி வாங்கியவன் நான்தான்!- ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன் சாட்சியம்

மஹிந்தானந்தவுக்கு எதிராக விஷேட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்