காத்தான்குடி சாமில் சலாஹியின் ஜனாஸா தற்போது கரையொதுங்கியுள்ளது.
காத்தான்குடி கடலில் நேற்று (08) மாலை நீராடியபோது நீரில் மூழ்கி காணாமற்போன சிறுவனின் ஜனாஸா இன்று (09) மீட்கப்பட்டது.
காத்தான்குடியை நூராணியா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவனான சாமில் சலாஹி என்பவரின் ஜனாஸாவே பூநொச்சிமுனை கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.