சூடான செய்திகள் 1

காணாமல் போன பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு

(UTV|COLOMBO)-சில நாட்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்த வீரகொட்டிய பொலிஸில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரியொருவரின் சடலம் இன்று வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஹெட்டியாராச்சி பிரேமதாச எனும் 53 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற நபரை காணவில்லை என வீட்டாரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!

பண்டிகைக் காலத்தில் சாதாரண விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வசதி

நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி…