சூடான செய்திகள் 1

காட்டு யானைத் தாக்குதலில் பெண் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-காட்டு யானை ஒன்று தாக்கியதால் படுகாயமடைந்து பெண் ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இன்று (29) அதிகாலை இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் கொட்டுகச்சிய – கந்தயாய பகுதியை சேர்ந்த 69 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை செய்த பின்னர் காலை உணவை தாயார் செய்யும் போதே குறித்த பெண் யானை தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.

உயிரிழந்த பெண் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் மண் சரிவு அபாயம்

முக்கிய மூன்று வழக்குகளை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமனம்

பஸ் கட்டண அதிகரிப்பு அமைச்சரவைப் பத்திரம் இன்று