சூடான செய்திகள் 1

களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

(UTV|COLOMBO) களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக இன்று முற்பகல் 8 மணி தொடக்கம் 12 அரை மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாத்துவை , வஸ்கமுவ , களுத்துறை – வடக்கு மற்றும் தெற்கு , கட்டுகுருந்த , நாகொடை , பேருவல , அளுத்கம , தர்கா நகரம் , மற்றும் பெத்தொட ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி, பயாகல , பிலமிநாவத்த போம்புவல , மக்கொன , களுவாமோதரை மற்றும் மொரகொல்லை போன்று பிரதேசங்களுக்கு நாளை முற்பகல் 8 மணி தொடக்கம் இரவு 8.30 வரை நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து

பாதுகாப்பற்ற மலசலகூட குழியில் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழப்பு

கொழும்பு முஸ்லிம் பாடசாலைக்கு உதவிய சஜித் !