உள்நாடு

களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல் !

(UTV | கொழும்பு) –     களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு நாளை காலை 9.30 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் படி நாளை காலை 9.30 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, மொரந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மேலும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா : 323 பேர் சிக்கினர்

சேர் ஜோன் ரபட் போட்டியில் நிந்தவூருக்கு தேசியமட்ட பதக்கம் – ரிஷாட், தாஹிர் எம்.பி வாழ்த்து

editor

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பெண் கைதி தப்பியோட்டம்