உள்நாடுசூடான செய்திகள் 1

கராபிட்டிய வைத்தியசாலையில் 6 கொரோனா தொற்றாளர்கள் பதிவு

(UTV |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 6 பேர் நேற்றைய தினம் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கராபிட்டிய வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வெலிசர முகாமைச் சேர்ந்த ஆறு கடற்படையினரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 343 பேர் பூரண குணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

பிள்ளையானுக்கு கன்னி அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி

மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு

ரொக்கட் ஒன்றினை நிர்மாணித்த மாணவனுக்கு ஜனாதிபதி 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு