உள்நாடு

கப்ராலிற்கு எதிரான மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்திருந்த அஜித் நிவாட் கப்ரால், அப்பதவியிலிருந்து விலகியதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனமானது, சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவித்து, அதனை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவி இடைநிறுத்தம்

editor

கல்முனை காரைதீவு கோட்டத்தின் கல்வி முன்னேற்ற கலந்துரையாடல்!

நிமல் லன்சாவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை