உள்நாடு

கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறப்பு

(UTV | கொழும்பு) –  கண்டி நகர எல்லைக்குள் மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் 42 பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரம் 6 தொடக்கம் 13 ஆம் வரையான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் U.கமகே குறிப்பிட்டார்.

எனினும், கண்டி கலைமகள் வித்தியாலயம் , திருத்துவக்கல்லூரி மற்றும் தக்ஷிலா கல்லூரி ஆகியன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், மீள ஆரம்பிக்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால இழப்பீடு

இலங்கையில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அலுவலகம் விரைவில் !

153 ஆசனங்களை வைத்திருந்த மஹிந்த இன்று மூன்று ஆசனத்தை வைத்திருக்கிறார் – நாம் கவலைக்கொள்ள தேவையில்லை – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor