உள்நாடு

கட்டுகஸ்தோட்டை தீ விபத்தில் மூவர் பலி

(UTV |  கண்டி) – கண்டி – கட்டுகஸ்தோட்டை, மெனிக்கும்புற பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தீப்பரவல் காரணமாக 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும், மேலும் ஒரு இளைஞன் ஆகியோர் உயிரிழந்துடன், தாய் காயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பம் – மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!!

editor

பாராளுமன்ற தேர்தலின் பின் கட்சியில் மாற்றம் – நாமல்

editor

பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன