சூடான செய்திகள் 1

கடுவலை முதல் பியகம வரையிலான வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) கடுவலை முதல் பியகம வரையிலான வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(26) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுவலை பாலத்தில் இடம்பெறும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த காலப்பகுதியில் மாற்றுவீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

Related posts

‘அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும்’

பொலிஸாருக்கு எதிராக நாளாந்தம் 50 முறைப்பாடுகள்

நாமலின் மின் கட்டணத்தை செலுத்திய சனத் நிஷாந்த!