உலகம்

கடும் வறட்சியில் 20 லட்சம் மக்கள் பாதிப்பு

(UTV|ZAMBIA) – காலநிலை மாற்றங்களின் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தற்போது 20 இலட்சம் மக்கள் உணவு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனால், பெண்கள், இலைகள் மற்றும் வேர்களை தேடி உணவை சேகரிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சராசரியை விட தென் ஆப்பிரிக்க பகுதிகளில் வெப்பநிலை இரு மடங்கு அதிகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால், அங்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடுப்பான தாய்லாந்து பிரதமர்

அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து – 94 பேர் பலி

ஜிசாட்-30 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ