சப்ரகமுவ, மத்திய, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (06) இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.