உள்நாடு

கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக தீக்கிரை

(UTV | கொழும்பு) – கொழும்பு – பாலத்துறை – கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்றிரவு 12.30 அளவில் தீ பரவியதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 தண்ணீர் பாரவூர்திகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

எனினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்

திறமை வாய்ந்த கற்றறிந்த புத்திஜீவிகள் சமூகத்தை உருவாக்க 24 நிர்வாக மாவட்டங்களிலும் 24 திறந்த சமுதாய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்.

இதுவரையில் 1,67 000 இற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி