உலகம்

ஓமானில் மசூதி அருகே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – பலர் காயம்.

ஓமான் நாட்டு தலைநகர் மஸ்கட்டின் வாடிகபீர் பகுதியில் உள்ள மசூதி அருகே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 4 பேர் பலியானார்கள்.

பலர் காயம் அடைந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சாட்சியங்களை சேகரிப்பதற்கான நடைமுறைகள், விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியது யார்? என பொலிஸார் தெரிவிக்கவில்லை.

Related posts

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகத்தின் அறிவிப்பு

காதலர் தினத்தில் ஏற்பட இருக்கும் பேராபத்து

நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்