வகைப்படுத்தப்படாத

ஒவ்வொரு பெற்றோர்களும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்!

வீடு சுத்தம் செய்தல்

சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் வீட்டை பெருக்குவதை தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.

பால் 

பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.

நகம் வெட்டுதல்

குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.

புதினா இலைகள் 

கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.

சுத்தம் 

வீட்டில் சின்னக்குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.

 

 

Related posts

Commander meets ‘Paada Yathra’ pilgrims in Yala

ஞானசார தேரரை கைது செய்ய அரசு தயக்கம் காட்டுவதேன்? பிரதமரிடம் ரிஷாட் முறையீடு

Low water pressure to affect several areas in Colombo