உள்நாடு

ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்ததடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மத்துகம-பொந்துபிட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில்

தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் அனுபவம் இருந்தாலும் அரசாங்கம் நிர்வகித்த அனுபவம் இல்லை – சாகல ரத்நாயக்க

editor

யாழ்.மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!